சேலம், ஆக.31- சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் கெங்கவள்ளி, வீரகனூர் மற்றும் சொக்கானூர் ஆகிய ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் கலந்துரை யாடியபோது தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் 20 குடிமராமத்து பணிகள் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அந்தந்த பாசனதார சங்கங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்குடி மராமத்துப் பணிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியோடு விவசாயிகள் அல்லது ஆயக்கட்டுதாரர் சங்கங்களின் 10 சதவிகித பங்களிப்புடன் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வரத்து கால் வாய்கள் புனரமைக்கும் பணிகள் உள் ளிட்ட பல்வேறு பணிகள் இக்குடி மராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள் ளப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறையின் சர பங்கா வடி நிலக் கோட்டத்திற்குட்பட்ட 9 ஏரிகள், 4 அணைக்கட்டுகள் புனர மைத்தல் பணிகளும், ஆணைமடுவு அணை மற்றும் கரியகோவில் அணை பகுதிகளில் அணுகுசாலை புனரமைத்தல் உள்ளிட்ட 19 பணிகளும், மேட்டூர் அணைக் கோட் டத்தின் சார்பில் சங்ககிரி, மேட்டூர் கிழக்கு கரை கால்வாயின் கிளை வாய்க்கால் புனரமைக்கும் 1 பணி என மொத்தம் 20 பணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சேலம் வட்டம், கெங்கவள்ளி, வீரகனூரில் உள்ள வீரகனூர் ஏரி, குடி மராமத்து திட்டத்தின் கீழ் வீரகனூர் ஏரி பாசன விவசாயிகள் நல சங்கத்தின் மூலம் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மேலும், சொக்கானூர் ஏரி ஆயக்கட்டுதாரர்கள் சங்கத்தின் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுவருகின்றன. இத்திட்டத் தினை சிறப்பாக முடித்திட இக்குடிமரா மத்து பணிகளை மேற்கொண்டு வரும் விவ சாயிகள் மற்றும் ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து இப்பணிகளை துரிதமாக முடித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த குடிமராமத்துப் பணிகள் ஆய்வின் போது பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையின் சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆர். கௌதமன், ஆத்தூர் வருவாய் கோட்டாட் சியர் எம்.துறை, பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையின் சரபங்கா வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறி யாளர் வி.ராஜேந்திரன், உதவி பொறி யாளர் சாந்தகுமார் உட்பட பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவ லர்கள், வருவாய்த்துறை, ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.