ராஜஸ்தானில் பந்தல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டம் ஜாரோல் பகுதியில் ராம கதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் வீசியதில் அங்கு போடப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தல் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ5 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.