சென்னை, ஆக. 19- பருவத் தேர்வு (செமஸ்டர்) நடத்தாமல் கட்டணம் வசூ லிப்பது ஏன் என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல் லூரிகள் மூடப்பட்டன. இதனால் கல்லூரி பருவத் தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு தவிர, பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட் டது. அதன்படி, பருவத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழ கங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் தேர்வு கட்டணத்தை செலுத்தாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடைபெறாத தேர்வுகளுக்கு எதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்? என்றும் மாண வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப் பட்டாலும், மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது, சான்றிதழ்கள் அச்சடிப்பது என்று இதர பணிகளுக்கான செலவு கள் இருப்பதால் கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. கட்டணம் வசூல் செய்வதில், பல்கலைக்கழகம் வெளிப் படைத் தன்மையை பின்பற்றுகிறது, என்றார்.