இது எப்படி இருக்கு
மொத்த ஒட்டுநர்கள் 7 லட்சம் பேர் வாரியத்தில் பதிந்தவர்கள் 24,600 பேர் நிவாரணம் பெற தகுதியுடையோர் 5634 பேர் பணம் செலுத்தப்பட்டது 3500 பேர் நலவாரிய கணக்குக்கு திரும்பியது 1100 பேர் உண்மையில் நிவாரணம் பெற்றவர்கள் 2400 பேர்
ஓட்டுநர்கள் வேதனை
தமிழக அரசு அறிவித்த ஊரடங்குகால நிவாரணத் தொகை 4 மாதமாகியும் ஆட்டோ ஓட்டுநர்களை சென்று சேர வில்லை. விதிகள், வரையறைகள் என்ற பெயரால் ஓட்டுநர்கள் அலைகழிக்கப்படு கின்றனர். ஆட்டோ, ஷேர்ஆட்டோ, கால்டாக்சி, ஆம்புலன்ஸ், வேன், தனியார் பேருந்து, பள்ளி வாகனம், லாரி என சாலையில் ஓடும் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக் கென்று தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் கள் நல வாரியம் உள்ளது. சென்னையில் 7 லட்சம் ஒட்டுநர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் ஆட்டோ ஒட்டுநர்கள்.
இதில் 24 ஆயிரத்து 600 பேர் (ஆட்டோ ஓட்டுநர்கள் 13ஆயிரம் பேர் உட்பட) மட்டுமே தங்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நல வாரிய உறுப்பி னர்களாக உள்ள ஓட்டுநர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக (மூன்று தவணை களாக) 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. வாரிய விதிகளின்படி உறுப்பினர் புதுப்பித்துக்கொண்ட 5 ஆயிரத்து 634 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்று சென்னை மாவட்ட நலவாரியம் அறிவித்தது. ஆனால், 3 ஆயிரத்து 500 பேரின் வங்கி கணக்கில் மட்டுமே பணம் செலுத்தப்பட்டது. அதிலும், தனியார் வங்கி கணக்கு, வங்கி கணக்கு எண் குளறுபடி, குறைந்தபட்ச வைப்பு தொகையின்மை உள்ளிட்ட காரணங்களால் 1,100 பேரின் வங்கிக் கணக்கில் செலுத்திய பணம் வாரி யத்திற்கே திரும்ப சென்று விட்டது. உண்மையில் 2 ஆயிரத்து 400 பேர் மட்டுமே நிவாரணம் பெற்றுள்ளனர். நலவாரிய உறுப்பினர்கள் அனை வருக்கும் நிவாரணம் வழங்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் பொதுச் செய லாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகை யில், “ அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரி யத்தில் 560 கோடி ரூபாய் பணம் தேங்கி கிடக்கிறது. இந்த பணம் முழுவதும் ஓட்டு நர்கள் செலுத்திய சாலைவரி, பசுமைவரி, காப்பீடு தொகை, ஜிஎஸ்டி, பெர்மீட், லைசன்ஸ் கட்டணம் ஆகியவற்றின் மூலம் சேர்ந்தது. அந்த பணத்தை தொழி லாளர்களின் நலனுக்கு கொடுக்க அரசு மறுக்கிறது.
அரசு அறிவித்த 3 ஆயிரம் ரூபாய் நிவா ரணம் நலவாரிய உறுப்பினர்களில் 18 ஆயி ரத்து 966 பேருக்கு கிடைக்கவில்லை. 5634 பேரில் 2400 பேருக்கே நிவார ணம் கிடைத்துள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 1900 பேர். பல்வேறு குளறு படிகளால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பணம் நலவாரியத்திற்கே திரும்பி சென்றுவிட்டது. அத்தகையவர்களின் ஆவ ணங்களை பெற்று சரிபார்த்து திரும்ப நிவாரணம் வழங்க மறுக்கின்றனர். கடந்த 4 மாதமாக வாரியத்தில் உறுப்பி னர் பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்குவது போன்ற எந்த பணியும் நடைபெற வில்லை. 68 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களை அங்கீகரித்து பதிவு எண், அடையாள அட்டை வழங்காமல் உள்ளனர். தொழிலா ளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நல வாரியம், அதனை செய்யாமல் உள்ளது. ஊரடங்கால் ஓட்டுநர்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். எனவே, வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவார ணம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, நிவாரணம் வழங்க வேண்டும்.” என்றார்.’
-செ.கவாஸ்கர்