சென்னை, பிப். 13- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 8 ஆண்டு களுக்கும் மேலாக தொகுப்பு ஊதி யத்தில் பணியாற்றும் மருந்தாளு நர்களை பணிவரன் முறை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரி டம் குடும்பத்துடன் முறையீடு செய்து ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் உ. சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர்கள் இரா.நம்பிராஜன், தெ. வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.டேனியல் ஜெய சிங், செயலாளர் நா.வினோத் குமார், இணை செயலாளர் மா. செந்தில்குமார், டிஎம்.எஸ். பகுதித் தலைவர் ந.மணிமாலா, செயலாளர் ஜெயராமன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முன்ன தாக மாநில அமைப்புச் செயலா ளர் வே.விஜயகுமரன் வரவேற் றார். மாநில பொருளாளர் அ. விஸ்வேஸ்வரன் நன்றி கூறினார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் 8ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்ற பேசிய மக் கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதியளித்ததை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் சங் கத்தின் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், கோப்புகள் அர சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வும், விரைந்து நடவடிக்கை எடுக் கப்படும் என இயக்குநர் உறுதி யளித்துள்ளார்.