மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி மகள் எம்.பூரணசுந்தரி. ஐஏஎஸ் தேர்வில் 286வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன், மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டத் தலைவர் டி. நாகராஜன், செயலாளர் பி.வீரமணி, டி.குமரவேல் மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், மேலப்பொன்னகரம் பகுதிகுழுச் செயலாளர் வை.ஸ்டாலின், முனிச்சாலை பகுதி செயலாளர் ஜெ.லெனின் ஆகியோர் வாழ்த்தினர்.