இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டுள்ளது
சிக்கித் தவிக்கும் படகில் 14 மீனவர்களை குறித்து எம்.வி. கேஸ் அயோனியன் என்ற வணிகக் கப்பல், சென்னையின் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல்களை அனுப்பியதை அடுத்து, பிராந்தியத்தில் உள்ள ஒரு இந்திய கடலோர காவல்படை கப்பல் மீட்பு பணியை மேற்கொண்டது.
தென்கிழக்கு பருவமழை காரணமாக ஆகஸ்ட் 4 முதல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.இதனால் அப்படகு நாகப்பட்டினத்திற்கு கிழக்கே கிட்டத்தட்ட 88 மைல் தொலைவில் கடலில் படகு சிக்கியது.
கடலில் பாதுகாப்பான நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஐ.சி.ஜி ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மீனவர்கள் போதுமான உயிர் காக்கும் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை கப்பலில் கொண்டு செல்லும்படி அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.