tamilnadu

img

ஆதவன் தீட்சண்யா மீது வழக்கு : தமுஎகச கண்டனம்

சென்னை, ஆக.6- தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா மீது பொய் வழக்கு தொடுத்துள்ளதற்கு தமுஎகச மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஆகஸ்ட் 4 அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., தலைமை வகித்தார். சங்க த்தின் கவுரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும்  மாநில நிர்வாகிகள், மாநில செய ற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த மார்ச் 2-ம் தேதி சென்னை யில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில், ‘முகிலன் எங்கே?’  என்ற  தலைப்பில் கண்டனக் கூட்டம் நடை பெற்றது. முகிலனை காவல்துறை யினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் 50-க்கும்  மேற்பட்ட அமைப்புகளின் தலை வர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கூட்டம் நடந்து ஆறு  மாதம் கழித்து தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முகிலன் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கவலையை பகிர்ந்து கொள்ளும் வகையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் பேசியதற் காக, சிலரை மட்டும் குறி வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளது அப் பட்டமான கருத்துரிமை பறிப்பாகும். மாநிலம் முழுவதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கலை இலக்கியவாதிகளை குறிவைத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. கருத்துரிமையை முடக்கும் இந்த செயலை தமுஎகச மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது என்றும் மாநி லக்குழு முடிவு செய்கிறது.

சாதிவெறி கக்குவதா?

அண்மையில், கேரளத்தில் நடைபெற்ற பிராமணர்கள் சங்கக் கூட்டத்தில்  வேங்கடகிருஷ்ணன் என்பவர், மனிதர்களிடையே பிறப்பால் சாதி பார்ப்பதில் தவறி ல்லை என்றும்; விலங்குகளிடம் சாதி பார்க்கிறோம்; சில சாதி நாய்களை  வீட்டு விலங்காகவும், சில சாதி நாய்களை காட்டு விலங்காகவும் வைத்திருக்கிறோம்; அதேபோல, அரிசியிலும் பல வகை உண்டு; எனவே, பிறப்பால் சாதி பார்ப்பதில் தவறில்லை. அது நியாயமான ஒன்றே என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் அவரது பேச்சு பரபரப்பாகியுள்ளது.  மேலும், சாதியப் பாகுபாடு களை நியாயப்படுத்தி பல்வேறு விஷக் கருத்துக்களை வெளிப்படை யாக பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத் தக்கது. அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன நெறிக்கு எதி ரானது. எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமுஎகச மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.