ஒப்பந்த தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, மே 6- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செய லாளர் சி.வினோத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழக பிஎஸ்என்எல் நிறுவ னத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். நிரந்தர ஊழியர்க ளுக்கு வழங்கும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவா கவே இவர்களுக்கு கூலி தரப்படு கிறது. அந்த ஊதியத்தையும் கடந்த 10 மாதங்களாக வழங்கா மல் உள்ளனர். குறிப்பாக, நாகர்கோவில் மாவட்டத்தில் ஒருபகுதி தொழிலாளர்களுக்கு 14 மாதத்திற்கும் மேலாக ஊதியம் வழங்காமல் உள்ளனர். இருப்பினும், ஒப்பந்த தொழி லாளர்கள் பணியாற்றி வரு கின்றனர்.
இருப்பினும், ஒப்பந்த ஊழி யர்களை பணியில் இருந்து விரட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது. ஊர டங்கு காலத்தில் ஒப்பந்த தொழி லாளிகளை வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு மாறாக மத்திய அரசு நிறு வனமான பிஎஸ்என்எல், புதிய முறையிலான டெண்டர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பழைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முயற்சித்து வருகிறது,
தமிழகத்தில் நாகர்கோவில், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய எஸ்எஸ்ஏ-க்களுக்கு பொறுப் பான நிர்வாகமும், கோவை மற்றும் நீலகிரி எஸ்எஸ்ஏ-க்க ளுக்கு பொறுப்பான நிர்வாக மும்தான் அதீத முனைப்பு காட்டி வருகின்றன. இந்த மோசடியை அமல்படுத்த மறுக்கும் அதிகாரி களை மாநில நிர்வாகம் மிரட்டி அமல்படுத்த முயற்சிக்கிறது.
புதிய டெண்டர் முறையில், டெண்டர் எடுத்தவர் செக்கி யூரிட்டி வைப்பு கட்டாவிட்டாலும் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம எடுத்தவர்கள் பணிக ளுக்கான ஆட்களை நியமிக்க இயலாத வகையில் ஊரடங்கு இருந்த போதும், இந்த ஒப்பந்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன? தற்போதுள்ள ஒப்பந்த தொழி லாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது. நிலுவை ஊதியத்தை உட னடியாக வழங்க வேண்டும். புதிய டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும். இதனை நிர்வாகம் அமல்படுத்தாவிடில் நோய் தொற்று காலத்திலும் போராட் டங்களை தவிர்க்க இயலாது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.