tamilnadu

img

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் 45 லட்சம் பேர் வேலை இழப்பு

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்த கத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய  இடத்தை பிடித்துள்ளது. உலக அள வில் இந்தியா தோல் வர்த்தகத்தில் 2வது இடத்திலும், தமிழ்நாடு தோல் தொழிலில் சிறந்து விளங்குகிறது. வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய  பகுதிகளில் தோல் தொழில் நடந்து  வந்தாலும் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டம் இத்தொழிலில் முதன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, மேல்விஷா ரம், ராணிபேட்டை ஆகிய பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும், 400க்கும் மேற்பட்ட ஷூ மற்றும் கையுறை தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக படிக்காத பெண்க ளுக்கு கூட எளிதில் வேலை வாய்ப்பு  வழங்கும் நிறுவனங்களாக ஷூ மற்றும் கையுறை தொழிற்சாலைகள் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத் தில் இயங்கி வருகிறது. பெரும்பா லான ஷூ மற்றும் கையுறை தொழிற்  சாலைகளில் பெண்கள் தேவை என விளம்பரம் பதாகை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்  டத்தில் இருந்து தோல் பொருட்கள்  வர்த்தகம் அதிக அளவில் இருப்ப தால் ஆம்பூர் நகருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தோல் பொருட்களில் முக்கிய மானது கை உரைகள் மற்றும் ஷூ  எனப்படும் தோல் காலணி ஆகும்.  ஆம்பூர், ராணி பேட்டை ஷூ மற்றும்  தோல் பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாங்  காங், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரே லியா, ஜரோபியா யூனி யன் உள்ளிட்ட உலகின் அனைத்து  நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. ஏற்றுமதியில் ஆண்டுக்கு இந்தி யாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது.

தோல் ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்த வரை கடந்த 2014-15 ஆம்  ஆண்டில் 6.49 பில்லியன் அமெரிக்க  டாலராகவும், 2015-16 ல் 5.83 பில்லி யன் அமெரிக்க டாலர்,  2016.17ல் 5.66 ல் அமெரிக்க டாலர் என அதன்  வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டு வருகிறது. மேலும் எந்த அளவுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்கிறதோ அந்த அளவுக்கு உள்நாட்டிலும் இதன் விற்பனை நடக்கிறது. தோல் தொழில் தான் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்  தோற்று காரணமாக தோல் மற்றும்  தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. சுமார் ஆயிரம் கோடி டாலர் (இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.75 ஆயி ரம் கோடி) ஏற்றுமதிக்கான  ஆர்டர் திரும்ப பெற்றதால் 144 தடை உத்த ரவு (லாக் டவுன்) முடிந்தாலும் இத் தொழில் செய்யமுடியாத சுழல் ஏற் பட்டுள்ளது. ஏற்கனவே இத் தொழில் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா நாட்டில் இருந்து தோல் பொருட்கள் தயா ரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் இறக்குமதி உட்பட பல்வேறு பிரச்சனை களை சந்தித்து  வந்தன. ஏற்றுமதிக்கான ஆர்டர் இல்  லாததால் லாக் டவுன் முடிந்தாலும் தொழில் செய்ய முடியாத சுழல் ஏற்  பட்டுள்ளது.

ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தோல்  மற்றும் தோல் பொருட்கள் தயா ரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எத்  தனை நாட்கள் வேலை கொடுக்கா மல் ஊதியம் தர முடியும். கடந்த சில  தினங்களாக தொடர்ந்து தொழிற் சாலை இயங்காமல் இருப்பதால் இயந்திரங்கள் பழுதாகி இருக்கும். லாக் டவுன் முடிந்து தொழிசாலை இயக்கு வேண்டும் என்றால் அனைத்து இயந்திரங்கள் பழுது பார்த்த பின்னர் புதிய தொழிற்சாலை இயக்குவது போல் தன அமையும். அதுமட்டும் இல்லமால் வேலை ஆட்களுக்கு வேலை தர வேண்டும்.  ஏற்றுமதிக்கான ஆர்டர் இல்லாத தால் தொழிலாளர்களுக்கு என்னா வேலை கொடுக்கணும் என்று தெரி யாமல் தவிக்கும் சூழ்நிலை காரண மாக தோல் தொழில் எதிர்க்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

ஆகையால் அரசுகளின் உதவி  இல்லாமல் தோல் தொழிற்சாலை கள் நடத்த முடியாது என்று பெரும்  பாலான தோல் ஏற்றுமதி மற்றும்  தோல் தொழிற்சாலை உரிமை யாளர்களின் கருத்தாக உள்ளது.

-முருகேசன், ஆம்பூர்