புதுக்கோட்டை,ஜூன் 15- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த வாகைப்பட்டி கிராமத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. கிராம மக்கள் சார்பாக கல் உடைக் கம் தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர் ஆர்.சித்ரா திங்கள்கிழமை ஆட்சி யரிடம் அளித்துள்ள மனு வில், வாகைப்பட்டி கிராமத் ்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு வழங்கப்படும் ஆழ்குழாய் குடிநீர் அமிலத் தன்மையுடன் உள்ளது. இதனால், கிராம மக்கள் சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிராம மக்களை பரிசோதித்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்துகின்றனர். எனவே, கிராம மக்க ளைப் பாதுகாக்கும் பொ ருட்டு, கிராமத்திற்கு காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலி ருந்து குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.