அறந்தாங்கி, பிப்.6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடை பெற்றது. ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி, வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு மிதிவண்டிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.இராஜநாய கம், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) கோவிந்தராஜ், கோட்டாட்சியர் குனசேகர் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக மாவட்ட கல்வி அலு வலர் விஜயலெட்சுமி வரவேற்றார். நிறைவாக தலைமை ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.