பொன்னமராவதி, பிப்.26- பொன்னமராவதியில் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை மற்றும் பொன்னமராவதி வர்த்தகர் சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன் தலை மை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவ லர் மருத்துவர் ரமேஷ்பாபு, கலப்பட உணவு பொரு ட்களை எப்படி கண்டு பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு உணவு பாது காப்பு குறித்து விளக்க உரை யாற்றினார். பொன்னம ராவதி நகர உணவு வர்த்த கர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி தேனப்பன் நன்றி கூறினார்.