பொன்னமராவதி, அக்.1- புதுக்கோட்டை பொன்னமராவதி காவல் நிலைய த்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர் கருணாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், காவலர்கள் மத்தியில் டெங்கு தடுப்பு குறித்து விளக்கினார். இதில் காவல் துணை ஆய்வாளர் பிரபாகரன், தலைமை காவலர் பெருமாள் உள்ளிட்ட காவலர்கள், பேரூராட்சி மேஸ்திரி பழனிச்சாமி, டெங்கு தடுப்பு பணியாளர் பழனியப்பன் பங்கேற்றனர்.