tamilnadu

கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, மார்ச் 12- கொரோனா வைரஸ் பாதிப்பைக் கணக்கில் கொண்டு மார்ச் 31 ஆம்  தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென  கல்வியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வியாளர் சங்கத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் அச்சம் ஏற்ப ட்டு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரிடமும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. நமது மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மாண வர்களிடம் இது குறித்த விழிப்புணர்வை  அதிகப்படுத்த வேண்டி உள்ளது. தற்போது பள்ளி கல்வித் துறை மூல மாக ஒரு விழிப்புணர்வு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அடிக்கடி தும்மல், இருமல் வருகின்ற மாணவர்களை மற்ற மாணவர்களோடு இணைந்திருப்பதை தவிர்க்கவும், உடல்நலமில்லாமல் இருக்கும் மாண வர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வும் அறிவுறுத்த வேண்டும் என்று குறி ப்பிடப்பட்டு உள்ளது.  இது சரியான நடவடிக்கை என்றா லும் கூட, மாணவர்களிடையே மன உளை ச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடும். ஏனெனில் பெரும்பகுதி மாண வர்களுக்கு இருமல், தும்மல் என்பது  இயல்பாகவே இருக்கிறது. இவ்வாறான சூழலில் எது சாதாரணமா னது, எது பாதிப்பிற்குரியது என்பதை  கண்டறிவது கடினமாகவும் இருக்கும்.  மேலும் அவ்வாறு தனிமைப்படுத்தப்ப டும் மாணவர்களை பிற மாணவர்கள் புற க்கணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  இது மனரீதியாக குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே தமிழகத்தில் மார்ச் 31 வரை மாண வர்களுக்கு விடுமுறை வழங்கி குழப்ப த்தையும் பதற்றத்தையும் போக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.