tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்

அறந்தாங்கி, மே 15- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 15 ஏழை மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி தலைவர் சுந்தரம் ஆகியோர் சொந்த செலவில் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.