பொள்ளாச்சி, செப். 23 - ஆனைமலை கல்லாங்குத்துப் பகுதி யில் பழங்குடியின மக்களுக்கு அரசுத் திட் டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் மீது சட்டரீதி யாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கல் லாங்குத்துப் பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமையில் ஆனைமலை வட்டாச்சியர் வெங்கடாச்சலத்திடம் மலைவாழ் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள கல்லாங்குத்துப் பழங்குடி யின கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பழங் குடியின குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் வருவாய்த் துறையின் மூலமாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. இதன்படி வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக முதற்கட் டமாக 116 பயனாளர்களுக்கு வீடுகள் கட்ட தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப் பட்டது.
இந்நிலையில், ஆனைமலையில் இயங்கி வரும் வாகை சேவை அறக்கட் டளை நிறுவனர் ரவிச்சந்திரன் என்பவர் பழங்குடியின மக்களைத் தொடர்பு கொண்டு, அரசு நிதியுடன் எங்களது அறக் கட்டளை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை யும் சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயி ரம் மதிப்பில் நான்கு அறைகள் கொண்ட வீட் டைக் கட்டித் தருவதாகக் கூறினார்.
இதனை யடுத்து 100 ரூபாய் முத்திரைத் தாளில் எங்க ளிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டும், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் கார்டுகளையும் 2017-18ல் பெற் றுக்கொண்டார்.
இதன்பின்னர் ஒவ்வொரு பயனாளியிட மிருந்து ஆயிரக்கணக்கான ரூபாயை ரவிச் சந்திரன் பெற்றுக்கொண்டதுடன், அரசு பயனாளிகளுக்கு அளித்த நிதியில் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். ஆகவே, இவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரது வசமுள்ள எங்க ளது வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் கார் டுகள், வீட்டுப் பணி ஆணைப் பத்திரம் ஆகி யவற்றைப் பறிமுதல் செய்து பயனாளர்க ளுக்கு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.