tamilnadu

img

காவல்துறையின் மிருகத்தனமான தடியடி காங். குற்றச்சாட்டு: முதல்வர் மறுப்பு

சென்னை, மார்ச் 16- குமரி மாவட்டம் குளச்சல் பகுதி யில் இளைஞர் காங்கிஸ் நடத்திய ஊர்வலத்தில் காவல்துறையினர் மிருகத்தனமாக தாக்கினார் என்று குற்றச்சாட்டை முதலமைச்சர் மறுத்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று(மார்ச் 16) கேள்வி நேரத்திற்கு பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ்,“குமரி மாவட்டம் குளச்சலில் தாண்டியாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் இம் மாதம் 12 ஆம் தேதி மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம்  நடைபெற்றது. இதற்கு காவல்துறை யினர் முதலில் அனுமதி கொடுத்தனர். அமைதியான முறையில் யாத்திரை மேற்கொண்டவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனுமதி  மறுத்தனர். இந்த சம்பவத்தின்போது 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் மிருகங்களை விட மிகவும் கொடூர மாக நடந்து கொண்டனர். காவல்நிலை யத்துக்கு அழைத்துச் சென்று மிரு கத்தனமாக லத்தியால் கடுமையாக தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி,“ பாத  யாத்திரை செல்ல லாரன்ஸ் என்பவர்  காவல்துறையிடம் அனுமதி கோரி னார். அந்த இடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மறுக்  கப்பட்டது. ஆனாலும், அனுமதி யின்றி பாத யாத்திரையை மேற் கொண்டனர். காவல்துறையின் அறிவு ரையை ஏற்க மறுத்தனர். சாலை மறி யலில் ஈடுபட்டதால் காவல்துறையி னர் கைது செய்தனர். அப்போது ஏற்  பட்ட வாய்த் தகராறில் காவல்துறை யினரை தாக்கினர். காவல் வாகன மும் சேதமடைந்தது” என்றார். இந்த சம்பவத்தையொட்டி லாரன்ஸ் உள்ளிட்ட 6 பேர்  சிறையில்  அடைக்கப்பட்டனர். 15 நபர்கள் காவல்  நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  காவல்துறையினரை தாக்கிய தால் போராட்டக்காரர்கள் மீது  இரண்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கூறியதுபோல் தடியடி ஏதும் நடத்தப்படவில்லை என்றும் முதல மைச்சர் கூறினார்.