மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.17- தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் மேலும் பரவாமல் தடுத்திட எதிர்க்கட்சிகள் உட்பட சமூக நலனில் அக்கறை உள்ள அனைத்துத்தரப்பி னரையும் இணைத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, தமிழக முதலமைச்சர், மீண்டும் மீண்டும் எதிர்க் கட்சிகளை முடக்குவது என்ற முறையில் பேசுவது மிகவும் மலியான அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்புப்பணிகளில் அரசியல் செய்வ தாக மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் மீது அபாண்ட மாக பழிசுமத்தி பேசி வருகிறார். உலக அளவில் இது வரை சுமார் 1.5 லட்சம் பேரை பலி கொண்டிருக்கிற, கொடிய கொள்ளை நோயாக கொரோனா நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற - வரலாறு காணாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில், அனைத்து கட்சி களையும், சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு கொரோனா தடுப்புப்பணிகளில் முழுமையாக ஈடு படுத்தி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதல மைச்சருக்கும் உள்ளது. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்; எனவே அனைத்துக்கட்சி கூட் டத்தை கூட்டுங்கள் என்று கூறி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் அதை ஏற்க மறுத்து விட்டார். வறட்டுப் பிடிவாதத்தோடு அதை நிராகரித்து வருகிறார்.
பல மாநிலங்களில் அரசுகள், எதிர்க்கட்சிகளு டன் கலந்துபேசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் கூட எதிர்க்கட்சிகளுடன் - அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார். ஆனால் தமி ழகத்தில் மட்டும் எதிர்க்கட்சிகளுடன் பேசமாட் டோம், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டமாட் டோம் என்பதன் நோக்கம் என்னவோ? இந்நிலையில், அரசுதான் கூட்டமறுக்கிறது, எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துவது, அதன் அடிப்படையில் கொரோனா தடுப்புப்பணிகளுக்கு உதவிகளைச் செய்வது, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்ற முறையில் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் சார்பிலும் வேறு பல அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு ஆலோ சனைக் கூட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் சூழ் நிலையில், இந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை மட்டும் நடத்தக்கூடாது என்று காவல் துறையை ஏவி தடுத்து நிறுத்தியது அராஜகத்தின் உச்சமே ஆகும். இந்தக் கூட்டம் கொரோனா தடுப்பு விதிகளின்படி உரிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவச ஏற்பாடுகளுடன்தான் நடை பெற இருந்தது. அதையும் ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை. ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க் கட்சிகள் என்ற முறையில் மக்களின் பிரச்சனை களை, கோரிக்கைகைளை ஆய்வு செய்து அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய - தீர்வுகாண செய்ய வேண்டிய பொறுப்பு என்பது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. அதன்படிதான் காணொலி மூலமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந் துள்ளது.மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசுக்கு கவனப்படுத்தும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஆனால் அதையும் பொறுப்பற்ற செயல் என்று முதலமைச்சர் விமர்சித் துள்ளார்.
அதுமட்டுமல்ல, எதிர்க்க்கட்சிகளையெல்லாம் கூட்டி ஆலோசனை கேட்பதற்கு அவர்கள் என்ன மருத்துவர்களா என்றெல்லாம் முதலமைச்சர் அரசி யல் வெறுப்புணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தி யுள்ளார். அவரது இத்தகைய பேச்சு மிகவும் மலி வான அரசியல் என்பதை தவிர வேறென்ன?
உண்மையில் தமிழகத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது முதலமைச்சரா அல்லது எதிர்க் கட்சிகளா? இந்த பிரச்சனையில் எந்த இடத்திலும் பிறகட்சிகள் பணிகளில் இடம்பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசியல் செய்வதே நீங்கள் தானே?
இன்னும் சொல்லப்போனால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயி ரம் கோடி வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை மொத்தத்திலேயே ரூ.810 கோடிதான் அளித்திருக்கி றது. அதையும் கூட, பேரிடர் நிவாரண நிதி என்ற பெய ரில்தான் அளித்திருக்கிறார்களே தவிர, தற்போது பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கொரோனா தடுப்பிற் காக பிரதமர் வசூலிக்கும் நிதியிலிருந்து எதுவும் தரவில்லை. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து, ஒருமித்த குரலை எழுப்பி மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது. அவரும் அதை கேட்க தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் கேட்டாலும் அதை விமர்சிக்கிறார்.
அதேபோல எல்லாகாலங்களிலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வது, நிவாரணம் வழங்குவது என்பது அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும், தனிநபர்களும் செய்யக் கூடிய வழக்கமான ஒன்றே ஆகும். அதற்கும் கூட மனிதாபி மானமற்ற முறையில் ஒரு தடை உத்தரவை பிறப் பித்து, பின்னர் விளக்கம் கூறி, பின்னர் அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அந்த உத்தரவை ரத்து செய்யும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்துள்ளன. நிவா ரணம் அளிப்பவர்கள் அரசிடம் அனுமதியெல்லாம் பெற வேண்டியதில்லை; தகவல் சொன்னால் போதும் என்று நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியிருக்கி றது.
இவையெல்லாம் என்ன நோக்கத்திற்காக தமி ழக அரசு மேற்கொண்டது? உணவு, குடிநீர் வழங்கு வதில் கூட எதிர்க்கட்சிகளின் பங்கு இருந்ததாக பதி வாகக் கூடாது என்ற எதேச்சதிகாரமான எண்ணம் தானே?
எனவே, இதுபோன்ற அராஜகமான எதிர்நிலை மனோபாவத்தை கைவிட்டு, கொரோனா பாதிப்பு என்பது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனை; அதன் பரவலை தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கவும், ஊரடங்கால் வேலை வாய்ப்பு, வருவாய் உள்பட அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பணி களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.