tamilnadu

img

ஐடிஐ படித்த 2900 பேரை நியமனம் செய்க!

சென்னையில்  மின்ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 23- அமைச்சர் அறிவித்தபடி ஐடிஐ முடித்த 2 ஆயிரத்து 900  பேரை பணி நியமனம் செய்ய  வலியுறுத்தி புதனன்று (அக்.23)  சென்னையில் உள்ள மின்வா ரிய தலைமையகம் முன்பு மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரியத்தில் சுமார் 46  ஆயிரம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. குறிப்பாக, தடை யின்றி மின்சாரம் வழங்கும் களப்பிரிவில் மட்டும் சுமார் 25  ஆயிரம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. ஒப்பந்த தொழி லாளர்கள், தொழில்நுட்பம் பயின்றவர், பட்டதாரிகள் என  பல தரப்பினரையும் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு மெத்தனமாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய  அமைப்பு தொடர் போராட்டங் களை நடத்தி வருகிறது. இதன்தொடச்சியாக மின் துறை அமைச்சர் ஐடிஐ படித்த  2 ஆயிரத்து 900 பேரை கள  உதவியாளராக நியமிக்க அறி விப்பை வெளியிட்டார். ஆனால் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அமைச்சர் அறி வித்தபடி 2 ஆயிரத்து 900 பேரை  பணியமர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பேசிய  அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், “வேலைப்  பளு காரணமாக ஊழியர்கள் தினம் தினம் இறந்து கொண் டுள்ளனர். எனவே, அமைச்சர் அறிவித்த 2 ஆயிரத்து 900 என்ற  எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி பணி நியமனம் செய்ய  வேண்டும். ஒப்பந்த ஊழியர் களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.  சென்னை வடக்கு மண்டலச் செயலாளர் ஆர். ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அமைப் பின் மாநிலத் தலைவர் தி.  ஜெயசங்கர், துணைப் பொதுச்  செயலாளர்கள் கே. ரவிச்சந்தி ரன், கே. அருள்செல்வன், இளங்கோ, துணைத் தலைவர் என்.பால்ராஜ், மாநிலச் செய லாளர் தனலட்சுமி, தெற்கு மண்ட லச் செயலாளர் ஏ. முருகா னந்தம், மத்திய சென்னை கிளை  தலைவர் வி. சீனிவாசன் உள் ளிட்டோர் பேசினர்.