tamilnadu

img

மின்பழுது நீக்கும் நவீன தொழில்நுட்பம் படிப்படியாக நடைமுறையாகும்

ஆர்.நல்லகண்ணு வேதனை

இராஜபாளையம், நவ.23- தமிழகத்தில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன என சிபிஐ மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு வேதனை தெரிவித்தார்.  இராஜபாளையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேலவளவில் ஏழு தலித்துகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அதிமுக ஆட்சியில் விடு விக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  சுடுகாட்டிற்குச்  செல்ல தனிப்பாதை என இன்னும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. இதைத்  தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைமுறைக்கு மாறாக மறைமுகத் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது,   பாஜக அரசு, தனது ஆட்சி அதிகாரத்தை அனைத்து மாநிலங்களி லும் கொண்டுவர வேண்டுமென எண்ணுகிறது.   ஜனநாயகத்திற்கு  விரோதமாக  மகாராஷ்ட்ராவில் சூழ்ச்சி செய்து ஆட்சி அமைத்துள்ள னர் என்றார். 2021- இல் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பது குறித்து கேட்ட தற்கு “அந்த அதிசயம் குறித்து ரஜினிக்கே” தெரியும். அதிசயத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை அவர் எந்த அதிசயத்தை சொல்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 150 பேர் படு கொலை செய்யப்படுகிறார்கள். இவைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.