சென்னை, டிச. 24- ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடைபெறும் பகுதி களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் எழுதியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணி பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதி யுள்ளார். அதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெரும் பகுதி களில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் பொதுவிடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.