சென்னை, ஜூலை 24- வங்கி தேர்வில் பட்டியலினம், இதர பிற்படுத்தப்பட்டோரைக் காட்டிலும் முன்னேறிய வகுப்பி னருக்கு மிகக் குறைந்த மதிப் பெண்கள் அளித்து சலுகை வழங்கியுள்ள மத்திய அரசு சமூக நீதியை படுகுழியில் தள்ளிவிட்ட தாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் “ஜூனியர் அசோசியேட்” பதவிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற நூறு மதிப் பெண்களுக்கு, பிற்படுத்தப் பட்டோருக்கு 61.25, பட்டிய லினத் தவருக்கு 61.25, பழங்குடி களுக்கு 53.75 என “கட் ஆப்” மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்த நிலையில், பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னே றிய வகுப்பினருக்கான 10 சத வீத இட ஒதுக்கீட்டின் கீழ் வரு வோர் 28.5 “கட் ஆப்” மதிப்பெண் கள் மட்டும் இருந்தாலே தேர்ச்சி எனக் கூறியுள்ளது. சமூக நீதியை மத்திய பாஜக அரசு எப்படி படுகுழியில் தள்ளி யிருக்கிறது என்பதை வெளிப் படுத்தியுள்ளது. சமூக நீதி கட்ட மைப்பை தகர்த்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், பட்டியலின, மற்றும் பழங்குடியின இளை ஞர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் வேலை வாய்ப்பை மேலும் பாழாக்கும் இந்த பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தூக்கியெறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.