சென்னை, செப்.3- வாலிபர் சங்க சேலம் வடக்கு மாநகரச் செயலாளரை கொடூர மாக தாக்கிய காவல் ஆய்வா ளருக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், செய லாளர் எஸ்.பாலா கடும் கண்ட னம் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வரு மாறு:- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் கதிர்வேல், சேலம் சின்னேரி வயல்காடு பகுதியைச் சேர்ந்த முருகனிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். முருகனின் வெள்ளி பட்டறையில் வேலை செய்யும் தமிழரசன் என்பவர் தொடர் வெள்ளி திருட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து புகார் கொடுப்பதற்காக கடந்த மாதம் 30 ஆம் தேதியன்று முரு கன் மகன் தினேஷ் குமார் மற்றும் கதிர்வேல் ஆகியோர் பள்ளப்பட்டி காவல்நிலை யத்திற்கு சென்றுள்ளனர். அங்கி ருந்த காவல் ஆய்வாளர் சாலை ராம் சக்திவேல் புகாரை வாங்க மறுத்து தோழர் கதிர்வேல் மீது கொடூரமான முறையில் தாக்கு தல் நடத்தியுள்ளார். மேலும், கேவலமான வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்தியுள்ளார். பள்ளப்பட்டி காவல் நிலையஆய்வாளரின் இத்தகைய அராஜகமான நடவ டிக்கையை வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே, பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அருகி லுள்ள புதிய பேருந்து நிலை யத்தில் பயணிகளிடம் செல் போன், லேப்டாப், பணம் பறிப் பது போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. காவல்ஆய்வாளர் சாலை ராம் சக்திவேல் இதை தடுப்ப தற்கு பதிலாக பொது மக்களை அச்சுறுத்துவது, ஆட்டோ ஓட்டு னர்கள் மற்றும் சாலையோரத் தில் உணவுக் கடை வைத்திருப்ப வர்களை மிரட்டி பொய் வழக்கு போடுவது போன்ற செயல் களை செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் திரு நங்கை ஒருவரை காவலர் சீருடை இல்லாமல் இரவு நேரத் தில் நடுரோட்டில் வைத்து கடு மையாக அடித்து கொடுமைப் படுத்தினார். காவல் நிலை யத்தில் புகார் கொடுக்க வந்த சாமிநாதபுரம் பகுதியைச் சார்ந்த தேவராஜன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டி யதால் மன உளைச்சலுக்குள் ளாகி தேவராஜன் குடும்பத்தி னர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன் தற்கொலைக்கு முயன்றார். எனவே, காவல்ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் மீது நட வடிக்கை எடுக்கவேண்டு மென்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி யுள்ளோம். இதன் காரணமாகவே, ஆய்வாளர் சாலைராம் சக்தி வேல் பழிவாங்கும் நோக்கத்து டன் தனது அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்தி தோழர் கதிர்வேல் மீது தாக்குதல் நடத்தி யுள்ளார். எனவே, காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பள்ளப் பட்டி காவல் நிலையஆய்வாளர் சாலைராம் சக்திவேல் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை யும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் வலியுறுத்தியிருக்கிறார்.