tamilnadu

img

உத்திரங்குடியில் 150 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

தரங்கம்பாடி, ஏப்.18- உத்திரங்குடியில் 150 ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், உத்திரங்குடி கிராமத்திலுள்ள 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் அரிசி,காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளையின் தலைமை செயலாளர் ஜெயகாந்தன், பொதுச் செயலாளர் பி.எஸ்.அய்யப்பன், ஊராட்சி தலைவர் லெனின் மேஷாக்,ஊராட்சி துணைத் தலைவர் நவீத் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.