tamilnadu

img

இந்நாள் நவ. 27 இதற்கு முன்னால்

1095 - முதல் சிலுவைப் போராகத் தற்போது குறிப்பிடப்படும் போருக்கு, க்ளெர்மாண்ட் அவை என்ற ழைக்கப்படும் ஒரு கூட்டத்தில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் அழைப்பு விடுத்தார். புனித பூமியை(ஜெருசலேம்), இஸ்லாமி யர்களிடமிருந்து மீட்பதற்காக 1095 இலிருந்து 1291வரை நடைபெற்றவை சிலுவைப் போர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. புனித பூமி என்று குறிப்பிடப்படும் இடம், தற்காலத்திய இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பகுதிகள், ஜோர்டானின் மேற்கு, லெப னானின் தெற்கு, சிரியாவின் தென்மேற்குப் பகுதிகள் அடங்கியது. கிறித்து சிலுவையில் அறையப்பட்டதும், உயிர்த்தெழுந்ததும் இங்குதான் என்பதால் கிறித்தவர்களுக்கும், இஸ்ரா-மிராஜ் ஒரே இரவுப் பயணத்தில் முகம்மது நபி இங்கிருந்துதான் விண்ணுலகம் சென்று இறைவனைச் சந்தித்துப் பேசியதாக நம்பப்படுவதால் இஸ்லாமி யர்களுக்கும், (கிறித்துவுக்குச் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு!) அரசர் சாலமன் முதல் கோயிலைக் கட்டிய இடம் என்பதால் யூதர்களுக்கும் இது புனித பூமியாக உள்ளது.

தற்காலத்திய எபிரேய(ஹீப்ரூ), அரேபிய மொழிகளில் அமைதி என்ற பொருளுடைய சலம் அல்லது ஷலோம் என்ற சொல்லிலிருந்து, அமைதியான குடியிருப்பு என்ற பொருளில் ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. வழிநடக்குமிடம் என்ற பொருள்கொண்ட யிரே, அமைதி என்ற பொருள்கொண்ட ஷலேம் ஆகிய எபிரேயச் சொற்கள் கடவுளால் இணைக்கப்பட்டு  ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாக எபிரேய விவிலியம் குறிப்பிடுகிறது. பைசாந்தியப் பேரரசை வீழ்த்தியபின் அனடோலியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய செல்ஜூக் துருக்கி யர்கள் 1073இல் ஜெருசலேமைக் கைப்பற்றினர். 1099இல் ஜெருசலேமை மீட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட தகவல்களில், புனித மண்ணை மீட்பதற்கான போர் என்று குறிப்பிடப்பட்டாலும், க்ளெர்மாண்ட் அவையில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் நிகழ்த்திய உரையில் இதைப்பற்றிய தகவல்கள் இல்லையென்றும் கூறப்படுகிறது. விவசாயிகளும், பொதுமக்களுமாகத் துருக்கியர்களுக்கெதிராகத் திரண்டு சென்ற கூட்டம், வழியில் ரைன்லாந்தில் யூதர்களையும் தாக்கிச்சென்றது. பொதுமக்கள் சிலு வைப்போர் என்றழைக்கப்படும் இந்தப் படை தோல்வியுற்றபின், (ஐரோப்பிய) இளவர சர்களின் சிலுவைப்போர் என்றழைக்கப்படும் முறையான படைகள் போரிட்டுத்தான் புனித பூமியை மீட்டன. மீண்டும் 1146இல் துருக்கியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து 1291வரை மொத்தம் 9 சிலுவைப்போர்களும் நடைபெற்றன. 

- அறிவுக்கடல்