மாலி,ஜூன் 9- இந்திய பெருங்கடல் பகுதி யில் அமைந்துள்ள நாடான மாலத் தீவுக்கு, இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடந்து வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் உள்ள மாலத்தீவு க்கு படகு போக்குவரத்தையும் தொடங்க இருநாடுகளும் திட்ட மிட்டன. இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரத மர் நரேந்திர மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் முகமது வுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது இந்தியா-மாலத் தீவு இடையே படகு போக்கு வரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இந்த திட்டம் தொடர்பாக புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது. இந்த திட்டத்தின்படி கொச்சி யில் இருந்து குல்குதுபசி வழியாக தினந்தோறும் படகு மூலம் பய ணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்து நடத்தப்படும். இந்த சேவை தினந்தோறும் நடத்த திட்ட மிடப்பட்டு உள்ளது. இரு நாடு களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கும் வகை யில் இந்த திட்டம் மேற்கொள்ளப் படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளி யிட்டுள்ளது.