tamilnadu

img

ரயில் பயணங்களில்...

ரயில் பயணத்தில் கழிவறைக்குப் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்தது குறித்து சமீபத்தில் படத்துடன் முகநூலில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை நண்பர்களும், தோழர்களும் பதிவிட்டிருந்தனர். இந்தப் பதிவின் நோக்கம், மத்திய அரசின் ரயில்வே கொள்கையையும், கொள்ளையையும் அம்பலப்படுத்துவது தானே தவிர, ஏதோ இப்போது தான் முதன்முறை கழிவறைக்குப் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்தது போல புரிந்து கொள்ளக்கூடாது. எத்தனையோ முறை என்னை தெரிந்த நபர்கள், தோழர்கள் நள்ளிரவில் கழிவறைக்கு வரும் போது பார்த்துவிட்டு பதறிப்போய் தங்கள் இடத்தை எனக்களித்துவிட்டு அவர்கள் ஓரமாக அமர்ந்து வந்திருக்கிறார்கள். சில நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத போது இத்தகைய பயணங்களும் தவிர்க்கவே முடியாததாகிவிடுகிறது. இதன் விளைவு தண்டுவடத்தில் வலியுடன் பல்லாண்டு காலமாக நான் அவதிப்பட்டு வருவது தோழர்கள் பலருக்கும் தெரியும். ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக பயணம் செய்கிறேன். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் என எனது பயணம் அமைந்து விடுகிறது.

எத்தனை வகை முன்பதிவு...
பயணிகளிடமிருந்து கொள்ளைய டிக்கும் நோக்கத்தோடு இந்திய ரயில்வே துறை முன்பதிவு டிக்கெட்டில் ஏராளமான மாற்றம் செய்து வந்திருக்கிறது. முதலில் முன்பதிவு உறுதி செய்யப்பட்டதும், காத்தி ருப்போர் பட்டியலில் மட்டும் இருந்தது. பிறகு ஆர்.ஏ.சி என்று கொண்டு வந்தார்கள். பிறகு தட்கல் என்று கூடுதல் கட்டணம் தீர்மானித்து மக்களின் அவசரத்தை பயன் படுத்தி கொள்ளையடித்தார்கள். பிறகு பிரிமியம் தட்கல் என்று கூறி பெருங் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதே ரயில், அதே அளவு சீட் எண்ணிக்கை, ஆனால் இத்தனை வகை யான முன்பதிவை பிரித்து வைத்திருக்கி றார்கள். அதுவும் இப்போது நான்கு மாதங்க ளுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என்று மாற்றிவிட்டார்கள். இதனால் எப்போதுமே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தான் கிடைக்கி றது. என்னைப் போன்ற இயக்கப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மூன்று நான்கு மாதங்க ளுக்கு முன்னால் நிகழ்ச்சியை தீர்மானிக்க முடியுமா?

கார்ப்பரேட் கம்பெனிகளை விட மோசமாக
முன்பதிவு செய்தவர்கள் கேன்சல் செய்தால் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்க ளுக்கு இடம் கிடைக்கும் நிலை என்பது  முன்பிருந்தது. ஆனால் ஆர்.ஏ.சி என்று கொண்டு வந்து மூன்று மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்டில் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எப்போ துமே டிக்கெட் உறுதி செய்யப்படாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.  பிறகு ஏன் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொடுக்கிறார்கள் என்றால் கேன்சல் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.65 பிடித்துக்  கொள்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் டிக்கெட் கேன்சலேசன் மூலம் இந்திய ரயில்வேக்கு கிடைத்த தொகை 48000 கோடி ரூபாய். இது யாருடைய பணம்? பயணம் செய்யாத மக்களுடைய பணம்.  பொது ஒதுக்கீட்டில் இருந்ததில் ஒரு பகுதியை தட்கல் என்று இவர்களாகவே ஒதுக்கிக் கொண்டு 100 ரூபாய் கூடுத லாக வசூலித்து விற்பனை செய்கிறார்கள். அதிலும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொடுக்கிறார்கள். பிறகு ரயில் புறப்படு வதற்கு அரைமணி நேரம் முன்பு வரை பிரிமியம் தட்கல் என்று 4 மடங்கு, 5 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அதாவது சென்னையிலிருந்து நாகப்பட்டி னத்திற்கு படுக்கை வசதி கொண்ட டிக்கெட்  ரூ.220. பிரிமியம் டிக்கெட் ரூ.850. இருவரும் ஒரே பெட்டியில் ஒரே மாதிரியான சீட்டில் எதிரெதிரே பயணம் செய்கின்றனர். இது மாபெரும் கொள்ளை இல்லையா?  மூன்று மாதத்திற்கு முன்பு டிக்கெட் எடுத்தவர் தரையில் அமர்ந்து வருவதும், அரைமணி நேரத்திற்கு முன்பு முடிவு செய்யப்பட்ட டிக்கெட் வழங்குவதும் என்ன வகையான வியாபாரம்? கார்ப்பரேட் கம்பெனிகளை விட படுமோசமான வியா பார உத்தியாக அல்லவா இருக்கிறது.

பகற் கொள்ளை
அரசே இப்படி கொள்ளையடிக்கும் நிலையில் ரயில்வேயை தனியார் கையில் ஒப்படைக்க போகிறேன் என்று மத்திய பி.ஜே.பி அரசு அறிவித்துள்ளது. தனியார் இதில் மேலும் எப்படியெல்லாம் லாபம் பார்க்கலாம் என்று தான் சிந்திப்பார்கள். ஜன்னலோர இருக்கையாக இருந்தால் அதற்கு ரூ.25 அல்லது 50 அதிகம் என்று தீர்மானிக்கலாம். கீழ்படுக்கைக்கு கூடுதல் கட்டணம் என்று தீர்மானித்தால் ஆச்சரி யப்பட வேண்டியதில்லை.  டிக்கெட் எடுத்த அனைத்து பயணிக ளுக்கும் இருக்கையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவர்களது பணத்தை சர்வீஸ் சார்ஜ் எடுத்துக் கொண்டு முழுமை யாக திருப்பித்தர வேண்டும். ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது பகற் கொள்ளை. முன்பதிவுக்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு கழிவறைக்கு பக்கத்திலோ, படிக்கட்டிலோ, நின்று கொண்டோ பயணம் செய்வது கொடுமையில்லையா? 500 டிக்கெட் வரை வெயிடிங் லிஸ்ட் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதன் நோக்கமென்ன? கேன்சலேசன் பணம் வருமானம் வரும் என்பது தானே. அரசே இப்படி நடந்து கொண்டால் தனியார் என்னென்ன வகை யிலெல்லாம் மக்களை கொடுமைப்படுத்து வார்களோ? டிக்கெட் முன்பதிவு செய்யும் படிவம் இப்போது இலவசமாக வழங்குகிறார்கள். தனியார் என்றால் அதை பலவண்ணத்தில் அச்சடித்து ஒரு படிவம் ரூ.5 என்றால் வாங்கித்தானே ஆக வேண்டும். இந்தியா வின் மிகப் பெரிய பொது போக்குவரத்து ரயில்வே ஆகும். அதை மேலும் மக்களுக்கா னதாக மாற்றுவோம்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்