tamilnadu

img

காவி நிறம் பூசப்பட்டதால் கழிப்பறையை வழிபட்ட மக்கள்

ஆதித்யநாத் அரசால் அரங்கேறும் மூடத்தனம்

லக்னோ, நவ. 8 - உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்த நாள் முதல், அங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் காவி வண்ணமாகவே காட்சியளிக்கிறது. பள்ளிக் கூடங்கள், அரசு அலுவல கங்கள் துவங்கி தலைமைச் செய லகம் வரை அனைத்தும் காவி வண்ண த்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தலை வர்களின் சிலைகளையும், இஸ்லாமி யர்களின் புனிதப்பயணம் தொடர்புடைய ஹஜ் அலுவலகத்தை யும் கூட ஆதித்யநாத் அரசு விட்டு வைக்கவில்லை.  இந்நிலையில்தான், கழிப்பறை ஒன்றுக்கும் காவி வண்ணம் அடிக்க, பொதுமக்கள் அதனைக் கோயில் என்று கருதி வழிபாடு நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள மாதஹா (maudaha)  பகுதியில் அரசு சார்பில் கழிப்பறை கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லா மல் இருந்துள்ளது. இந்நிலையில், இந்த கழிப்பறைக்கு காவி நிறம் பூசப்பட்டு இருந்ததால், அப்பகுதி யை கடந்து செல்பவர்கள் வாசலில் நின்று வணங்கி சென்றுள்ளனர். சிலர் ஒருபடிக்கு மேலே சென்று- பூட்டப்பட்டிருந்த கழிப்பறை வளாகத்தின் வெளியே பூ, பழம் வைத்து பூஜையும் நடத்தியுள்ளனர். தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், தற்போது மாதஹா பகுதி கழிப்ப றைக்கு காவி நிறத்தை மாற்றிவிட்டு, பிங்க் வண்ணம் அடித்துள்ளது.