tamilnadu

img

பொது விநியோக முறையை பலப்படுத்துக: புதுச்சேரியில் ஜூலை 9இல் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 6- ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பொது விநி யோக முறையை பலப்படுத்தக் கோரி  இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரி யில் ஜூலை 9இல் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயலாளர்  ராஜாங்கம் தலைமையில் இடது சாரிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து இடதுசாரி கட்சி கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று மிகப்பெரும் மனித பேரழிவையும், பொருளாதார சீரழிவையும் ஏற்படுத்தி வரு கின்றன. இக்காலத்தில் மத்திய, மாநில அரசுகள் உறுதியான நட வடிக்கையை எடுக்கத் தவறியதால் இத்தகைய பேரழிவினை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தொற்றை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்று வது அவசியமாகும். ஆனால் நோய்த் தொற்றையும் மரணங்களை யும் கட்டுப்படுத்த உணவும், ஊட்டச்சத்தும் முக்கியமானதாகும். அதோடு அரசு மருத்துவ கட்ட மைப்புகளை வலுப்படுத்துவதும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவம் முக்கியமாகும்.

புதுவை காங்கிரஸ் அரசு பொது விநியோகத் திட்டத்தை மாநில நிதி யிலிருந்து செயல்படுத்தத் தவறி யுள்ளது. மாநில அரசு இலவச அரிசித் திட்டம், பண்டிகை கால  பொருட்கள் கடந்த காலங்களில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப் பட்டு வந்தன. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச் செயலாளர் ஆகியோரின் கண்மூடித்தனமான முடிவால் ரேஷன் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளை மூடுவதன் வழியாக பொது வினியோக முறையை அழித்தொழிப்பது ஏழை மக்களின் நலனில் அக்கறை இல்லாத செயலா கும். ஊட்டச்சத்து குறைபாட்டால் எளி தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரணமான சூழலில் இடது சாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் வலியுறுத்தல் காரணமாக வும், மக்களின் பட்டினி நிலை குறித்த  உலக சுகாதார நிறுவனத்தின் செயல் அறிக்கையாலும் மத்திய அரசு  இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே கேரளம், தமிழகத்தைப்  போன்று பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் புதுச்சேரியில்  செயல்படுத்த அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மக்களை கேட்டுக் கொள்கிறோம். 

தர்ணா போராட்டம்
மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் 9ஆம் தேதி தட்டாஞ்சா வடி குடிமை பொருள் வழங்கல் துறை  அலுவலகம் மற்றும் துணைநிலை ஆளுநர் மாளிகை அலுவலகம் முன்பும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் உள்ள அனைத்து  ரேஷன் கடைகள் முன்பும் தர்ணா  போராட்டம் நடைபெறும். தனிமனித இடைவெளியை பின்பற்றி இந்தப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த கூட்டறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பி னர் சுதா, தமிழ் மாநில குழு உறுப்பி னர் பெருமாள், பிரதேச குழு உறுப்பி னர் முருகன், செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர்  அபிஷேகம், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் செயலாளர் பால சுப்பிரமணியன், மற்றும் மோதிலால், புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.