tamilnadu

img

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் புதுவை பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தக்சினா கன்னடா மாநிலத்துள்ளது ஸ்ரீராம வித்யாகேந்திரா உயர் நிலைப்பள்ளி. ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பிரபாகர் பட்டிற்கு சொந்தமான  அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை நடித்து காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாபர் மசூதி படம் பொறிக்கப்பட்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை, வெள்ளைச் சட்டை மற்றும் காவி நிற கீழாடை அணிந்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஓடிச் சென்று கையில் கிடைத்ததைக் கொண்டு அந்த பேனரைத் தாக்குகின்றனர். பின்னர், ஸ்ரீராமஜெயம், ஜெய்ஹனுமான் என்று கோஷம் எழுப்பினர். பின்னர், பாபர் மசூதியை இடித்த பிறகு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராமர் கோயில் போன்ற உருவத்தில் அணிவகுத்து நின்றனர்.  

இந்திய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பல ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் டிவிட்டர் பதிவில், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் 3,800-க்கும் அதிகமானவர்கள் இந்த ராமர் கோயில் உருவத்தைக் கொண்டுவந்துள்ளனர்’ என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மாணவர்கள் கொண்டாடும் நிகழ்வை கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதில்களை மறைக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில், துணைநிலை ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கேரி புகார் அளித்துள்ளனர்.