புதுதில்லி,நவ.17- ஹோட்டல்களில் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில், கடந்த 1998 ஆம் ஆண்டு, தாஜ்மஹால் என்ற ஹோட்டலுக்குச் சென்றவரின் கார் காணாமல் போனது. இது குறித்து காரின் உரிமையாளர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது, காரின் உரிமையாளருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்திற்கு உத்தர விடப்பட்டிருந்தது. ஹோட்டல் நிர்வாகம் நிவாரணம் வழங்க மறுத்த தால், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய நுகவர்வோர் குறை தீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் ஹோட்டல்களில் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.