ஏ.பி.ஐ. மூலப்பொருள் கிடைக்காது
புதுதில்லி, ஜூன் 19 - இந்திய - சீன எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியாவில் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவ்வாறு செய்யும் பட்சத்தில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருந்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜெனரிக் மருந்து தயாரிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், இந்த மருந்துகளை தயாரிக்க தேவைப்படும் ஏ.பி.ஐ. (Active Pharmaceutical Ingre dients) எனப்படும் மூலப் பொருட் களுக்கு சீனாவையே இன்றும் இந்தியா நம்பியுள்ளது.
ஏ.பி.ஐ. எனும் மூலப்பொருளை சுமார் 80 சதவிகிதத்துக்கு மேல் சீனா விடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் ஏ.பி.ஐ உற்பத்தி மிகக் குறைவு. அத்துடன், இந்தியாவில் தயாரி க்கப்படும் ஏ.பி.ஐ. மூலப்பொருளை மருந்தாக்கி இறுதி வடிவம் கொடுப்ப தற்கான சில பொருட்களும் சீனா விடம் இருந்தே இறக்குமதி செய்யப் படுகின்றன. அண்மையில் கூட, சீனாவிடம் இருந்து ஏ.பி.ஐ. மூலப்பொருள் இற க்குமதி- கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் பல நிறுவனங்கள் மருந்து உற்பத்தி யை குறைத்தன. கொரோனா சோதனைக்கான ரேபிட் கிட்டுகள், பிபிஈ (PPE) எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் ஆகியனவும் அதிகளவில் சீனாவிடமிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. அவ்வாறு இருக்கையில், தடாலடியாக சீன பொருட்களுக்கு தடை விதித்தால், அது இந்தியா வுக்கே எதிராக திரும்பி, இந்தியா வில் மருந்து உற்பத்தி பெருமள வில் பாதிக்கப்படும் என்று மருந்து உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங் கள் தெரிவித்துள்ளன.