புதுச்சேரி,அக்.22- இ.பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.9ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஈ.பி.எப் பென்ஷ னர்களின் அமைப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது. புதுச்சேரி இ.பி.எப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் முதல் மாநாடு புதுச்சேரி யில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளி வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இ.பி.எப் பென்ஷ னர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலா ளர் கே.பி.பாபு கலந்து கொண்டு உரையாற்றி னார். சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முரு கன், அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன், புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் புதுச்சேரி கவுரவத் தலைவ ராக கே.முருகன், தலைவராக வி.ராம கிருஷ்ணன், செயலாளராக டி.குணசேகரன், பொருளாளராக எம்.ராமலிங்கம், சட்ட ஆலோ சகர்களாக சி.எச்.பாலமோகன், ஆர்.நட ராஜன் உட்பட 27 பேர் கொண்ட புதிய பிர தேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானம்
இ.பி.எப் பென்ஷர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகை ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். விலை வாசி உயர்வுக்கு ஏற்றார் போல் பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவ சிகிச்சை வசதியை பென்ஷனர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.