tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை எட்டும்

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாதத்தில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் உயிர்காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.