சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு வரும் ஜனவரி மாதம் 23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி அதன் பொதுச் செயலாளர் கே.கர்சன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொருளாளர் ஏ.வரதராஜன், நிர்வாகிகள் மு.நீலமேகம், பி.முருகேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.