tamilnadu

img

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக்குழு

புதுதில்லி, மே 4- கொரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களுக்கு சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. அந்தக் குழு சென் னைக்கும் வருகை தர உள்ளது. கொரோனா வைராஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தில்லி உள்பட ஒன்பது மாநிலங்களில் இருக் கும் 20 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.

இந்த மத்திய சுகாதாரக் குழு வினர் மாநில அரசுகளின் சுகாதாரக் குழுவுக்குத் தேவையான உதவி களைச் செய்து கொரோனா வைரஸ் பரவலையும், பாதிப்பைும் கட்டுக் குள் கொண்டு வருவர் எனக் கூறப் பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்படி கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்க ளாகவும் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்ட லங்களாகவும் அறிவிக்கப்பட்டுள் ளன. கொரோனா  இல்லாத 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன.

இதில் சிவப்பு மண்டலங்களில் இருக்கும் 130 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்ச கத்தின் கணக்கின்படி, மகாராஷ்டிரா வில் மும்பை, தானே, புனே, மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், குஜ ராத்தில் அகமதாபாத், சூரத், வதோ தரா, தில்லியில் தென்கிழக்கு தில்லி, மத்திய மாவட்டம், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உத்தரப் பிர தேசத்தில் லக்னோ, ஆக்ரா, தெலுங் கானாவில் ஹைதராபாத், தமிழ கத்தில் சென்னை, மேற்கு வங்கத் தில் கொல்கத்தா, ஆந்திராவில் குர்னூல், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவினர் விரைவில் அனுப்பப்பட உள்ளனர். இந்தக் குழு வில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி), எய்ம்ஸ், ஜிப்மர், அனைத்திந்திய பொதுநலம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றிலி ருந்து இடம் பெறுவார்கள். இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிலவரம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறிந்து மாநி லங்களின் கூடுதல் தலைமைச் செய லாளர், முதன்மைச் செயலாளர், சுகா தாரத்துறை செயலாளர் ஆகியோ ருக்கு அறிக்கைகளையும், பரிந்து ரைகளையும் அனுப்புவார்கள். இந்த ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்குச் செல் லும் மத்திய சுகாதாரக் குழுவினர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் துணையுடன் செயல்படுவார்கள்.

இந்த ஒன்பது மாநிலங்கள், யூனி யன் பிரதேசத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (12,974), குஜ ராத்தில் (5,428), தில்லியில் (4,549), தமிழகத்தில் (3,023), மத்தியப் பிர தேசத்தில் (2,846), ராஜஸ்தானில் (2,886), மேற்குவங்கத்தில் (963), உத்தரப் பிரதேசத்தில் (2,645), ஆந்தி ரப்பிரதேசத்தில் (1,583), தெலுங்கானா வில் (1,082) நோயாளிகள் உள்ள னர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,389 ஆகவும், தொற்றால் பாதிக்கப் பட்டோர் 42,836 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 111 பேர் வெளி நாட்டினர்.  11,762 பேர் குணமடைந் துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிடிஐ, இந்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பத்துறை அமைச்சக தகவல்களிலிருந்து