புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான நிதியை பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடம் கட்ட டாடா திட்டங்களால் கட்டப்படவுள்ளது. இதன், செலவு 861.90 கோடி செலவில் கட்டிடம் அமைகிறது. கட்டிடத்திற்கான ஏலத்தில் லார்சன் மற்றும் டூப்ரோவை விட அதிகாமாக 865 கோடிக்கு டாடா நிறுவனம் எடுத்துள்ளது. இதுகுறித்த நிதி வெளியீடுகளை பொதுப்பணித்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த திட்டமானது ஒரு வருடத்தில் நிறைவடையம். நாடாளுமன்ற கட்டிடம் அமைக்க தோராயமாக 940 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது. கட்டிடம் முக்கோண வடிவமைப்பில் கட்டப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் வட்டமானது. இந்த கட்டிடம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பின்னர் மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.