tamilnadu

img

பொய் விளம்பரங்கள் செய்தால் 5 ஆண்டு சிறை

சந்தையில் கிடைக்கும் அழகு சாதன க்ரீம்கள் மூலம் தோல் வெள்ளையாகும் என்பது போன்று பொய்யான விளம்பரங்கள் செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
78 வகையான நோய்கள், குறைபாடுகளை சரிசெய்வதாகக் கூறி மருந்துகள்,  மற்றும் தயாரிப்புகளை விளம்பரம் செய்வது இந்த சட்டம் தடை செய்கிறது. இந்த தடைப் பட்டியலில் தோலை வெள்ளையாக்குவது, பாலுறவு திறனை அதிகரிப்பது, திக்குவாய் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை குணப்படுத்துவது, முடியை பழுப்பு நிறமாக மாற்றுவது தொடர்பான விளம்பரங்களும் சேர்க்கப்படுகின்றன. 
மேலும் இத்தகைய விளம்பரங்களை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.