tamilnadu

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

நாமக்கல், ஜூன் 1-ராசிபுரம் அருகேயுள்ள ஒடுவன்குறிச்சி பகுதியில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (26). இவர் நாமகிரிப்பேட்டை மின் வாரியத்தில் மின் கம்பங்கள் சீரமைப்பு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஒடுவன்குறிச்சி பகுதியில் மின்சார சீரமைப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது, மின்கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன், ஆபத்தான நிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.