tamilnadu

மாணவர்கள் பருத்தி அறுவடை

 சீர்காழி, ஜூலை 17- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்த வக்கரை கிராமத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்க லைக்கழக வேளாண் புல இறுதியாண்டு படிக்கும் ஜி 2 குழுவைச் சேர்ந்த 16 மாணவிகள் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அனுபவங்களை கற்றும் தங்களிடம் உள்ள பயிர் சாகுபடி சம்மந்தமான நவீன தொழில்நுட்பங்களை விவ சாயிகளிடம் பகிர்ந்தும் வருகின்றனர்.  செவ்வாயன்று குத்தவக்கரையில் பருத்தி பயிரி டப்பட்ட ஒரு விவசாயிக்குச் சொந்தமான வயலில் பருத்தி அறுவடை செய்வது குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். வேளாண் பேராசிரியர் முனைவர் வெற்றிச்செல்வன், குழு தலைவி ஆனந்தி, துணைத் தலைவி அன்பரசி மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட னர்.