தரங்கம்பாடி, செப்.8- நாகை மாவட்டம் செம்பனார்கோவி லில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன் றம் சனியன்று திறக்கப்பட்டது. 1620 முதல் 1845 வரை தரங்கம்பாடியை யும், அதைச் சுற்றிய பகுதிகளை யும் ஆட்சி செய்த டேனிஷ்காரர்களி டத்திலிருந்து மிக சொற்ப விலைக்கு தரங்கம்பாடியை வாங்கிய பிரிட்டிஷ் காரர்கள் கோட்டைக்கு எதிராக இன் றும் கம்பீர தோற்றத்துடன் உள்ள டேனிஷ் கவர்னர் மாளிகையில் 1857ல் உரிமையியல் நீதிமன்றத்தை அமைத்து இந்தியர்களிலேயே முதல் நீதிபதியாக தமிழரான மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பிரிட்டிஷ் அர சாங்கம் நியமித்தது. 1884 வரை அதே இடத்தில் நீதி மன்றம் செயல்பட்ட நிலையில் பின்னர் அருகில் உள்ள பொறையாருக்கு மாற்றப்பட்டு செயல்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தரங்கம் பாடியில் மீண்டும் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென பல ஆண்டு களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமன்றத் தில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பு களை வெளியிட்ட தமிழக முதல்வர், தரங்கம்பாடியில் நீதிமன்றம் அமைக் கப்படும் என அறிவித்து நாட்கள் கடந்த நிலையில் தீக்கதிர் நாளிதழில் நீதி மன்றம் குறித்து வரலாற்று தகவல் களுடன் 3 முறை செய்தி வெளியானது. பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானதையடுத்து தரங்கம்பாடி யிலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள செம்பனார்கோவில் அருகேயுள்ள திருச்சம்பள்ளியில் மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் மற்றும் நடுவர் நீதி மன்றத்தை மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பத்மநாபன், புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்தார். நீதிமன்றம் அமைந்துள்ள கட்ட டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக வேளாண்மை விரிவாக்க மைய அலு வலகம் செயல்பட்ட நிலையில் கட்டிடம் சேதமடைந்து விட்டது என காரணம் காட்டி திருக்கடையூரில் புதிய கட்டி டம் கட்டப்பட்டு அந்த அலுவலகம் தற்போது அங்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பாழடைந்த, உறுதித் தன்மை இல்லாத ஒரு கட்டிடத்தில் நீதி மன்றம் அமைவது பல்வேறு தரப்பினரி டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி. சீனிவாசன் கூறும்போது, புகழ்பெற்ற வரலாற்று நகரமான தரங்கம்பாடியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து விட்டு திடீ ரென திருச்சம்பள்ளி என்ற இடத்தில் சேதமடைந்த ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசி நீதிமன்றத்தை திறந்திருப்பது மக் களை ஏமாற்றும் விதமாக உள்ளது. உடனடியாக தமிழக அரசும், நீதித் துறையும் தரங்கம்பாடியிலேயே நிரந் தரமாக ஒரு கட்டிடத்தை கட்டி நீதி மன்றம் அமைக்க வேண்டுமென வலி யுறுத்தியுள்ளார்.