தரங்கம்பாடி, மார்ச் 4- விபத்து குறித்து வழக்குப் பதியாத பொறையார் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தில்லையாடி வள்ளியம்மை நகரில் வசிக்கும் உத்திராபதி என்பவரது மகன் தமிழ்செல்வன்(28). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டருகே நின்றிருந்த போது வனஜா என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சைப் பெற்று வருகிறார். உடலில் அதிக காயங்கள் ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதியாமல் அலட்சியம் காட்டுவதாகவும், உடனடியாக விபத்து குறித்து உரிய வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி எழுந்து நடக்க முடியாத நிலையிலுள்ள தமிழ்செல்வனை அவரது உறவினரான சித்ரா மற்றும் வழக்கறிஞர் சங்கமித்ரன் ஆகியோர் ஆம்புலன்சில் அழைத்து வந்து கோட்டாட்சியர் மகாராணியிடம் மனு அளித்தனர்.