சீர்காழி, மார்ச் 2- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி க்கு புதிய கட்டடம் கட்டப் பட்டு கடந்த ஆறு மாதங்க ளாக அதில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்லூரிக்கு செல்லும் நுழைவு வாயில் பாதை மேம்படுத்தும் பணி தற்பொழுது நடைபெற்று வருவதை சீர்காழி எம்.எல்.ஏ பாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒன்றிய செயலாளர் நற்குணன், பேராசிரியர்கள் பிரபாகரன், சத்தியமூர்த்தி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.