சீர்காழி, மார்ச் 24- நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா அகர வட்டாரம் ஊராட்சி 1வது வார்டு குருவியாம் பள்ளம் தெருவில் சாகுபடி தோப்புக்கு அருகில் வார்டு உறுப்பினர் வீட்டுக்கு முன்பே சுமார் ஓராண்டு காலமாக நான்கு குப்பைத் தொட்டிகளை வயலில் கிடக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் இங்குள்ள குளத்திற்கு படித்துறை கட்டித் தர வேண்டும். குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே வைத்து பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறை யினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.