tamilnadu

நாகை மாவட்டத்தில் முதன் முதலாக  புத்தூர் ஊராட்சிப் பள்ளியில் கராத்தே வகுப்பு 

 சீர்காழி செப்.9- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியல் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கியது. அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கராத்தே வகுப்பு நாகை மாவட்டத்திலேயே முதன்முதலாக புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கட்டாய மாக கலந்துக் கொண்டு பயன் பெற வேண்டும் என்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பூங்குழலி, வரதராஜ பெருமாள், கராத்தே பயிற்றுனர் நாகராஜன் தலை மையிலான குழுவினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.