tamilnadu

img

சேதமான கரியாப்பட்டினம் சாலை

  நாகப்பட்டினம், டிச.15- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டி னம்-செம்போடைச் சாலை, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையால், மிகவும் சேத மடைந்துள்ளது. இதேபோல, சாலை முழுவதும் பள்ள மும் குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது, பள்ளங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றன. இப்பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றும், தனி யார் பள்ளிகள் இரண்டும் ஆரம்ப சுகாதார நிலையம், தேவா லயம், காவல் நிலையம் ஆகியன உள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களும் மற்ற இடங்களுக்குச் செல்லும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மாணவ மாணவியரின் சீருடைகள் சேறும் சகதியுமாகி விடுகின்றன. பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக  கவ னித்து நடவடிக்கை எடுக்குமாறு கரியாப்பட்டினம், செம்போடை ஊர்மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இல்லையேல், இப்பகுதிப் பொதுமக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களை மேற்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கிறார்கள்.