tamilnadu

img

ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தரங்கம்பாடி, மே 9- நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி வட்டங்களில் 26 இடங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் அரசு அலு வலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் சேமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஜாக் பொதுச்செயலாளர் டி.ராயர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அலமேலு, பத்மாவதி, சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் வி.ஏ.ஓ அலுவலகம் முன்பு பி.வி.ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.வி.செந்தில்குமார், ரவி உள்ளிட்ட சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.