tamilnadu

img

மணிப்பூரில் பாஜக அரசுக்கு நெருக்கடி

மணிப்பூரில், பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 9 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்ற நிலையில், அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017லில் நடந்த தேர்தலில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 21 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருந்தது போதும் கூட, பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபகாலமாக நடந்த மோதல் போக்கு காரணமாக விரிசல் ஏற்பட்ட பாஜக கூட்டணி தற்போது முழுமையாக உடைந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததோடு காங்கிரஸில் இணைந்தனர். அதே சமயம், பாஜகவின் கூட்டணி கட்சி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜக அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், அம்மாநில பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி பாஜகவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மணிப்பூர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.