திருவனந்தபுரம், ஆக.11- வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதில்கூட மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளத்தை புறக்கணித்தார். கேரள மாநிலம் வயநாடு, மலப்புறம் மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி யுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய படையினரும் மாநில அரசின் தீயணைப்பு படை காவல் மற்றும் வனத்துறையினரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். துயரத்தில் உள்ள மக்களை மீட்கவும் நிவாரணம் அளிக்கவும் கேரள அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை மாநிலத்தை புறக்கணிப்பதாக உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார்.